வருடாந்த ஆசிரியர் தினம் - 2015

தவசி லேணிங் சிற்றியின் வருடாந்த ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று (12.12.2015) கல்வி நிலையத்தின் திட்டமிடல் இணைப்பாளர் அக்‌ஷயன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின்போது திரு. தா.சன்முகதாஸ் (அதிபர், முறக்கொட்டான் சேனை இ.கி.மி. வித்தியாலயம்) அவர்களும், திரு. ஜெ.நடேசானந்தராஜா (ஆசிரியர், களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயம்) அவர்களும், திருமதி ச.பவளசுந்தரி (ஆசிரியர், வந்தாறுமூலை விஸ்னு மகா வித்தியாலயம்) அவர்களும், திருமதி த.ஜெயமாலா (ஆசிரியர்,வாழைச்சேனை இந்துக் கல்லூரி) அவர்களும் கெளரவிக்கப்பட்டார்கள்.

மேலும் இந்த நிகழ்வில் கல்வி நிலைய ஆலோசகர் சி.தில்லையன், கல்வி நிலைய பிரதிப் பணிப்பாளர் க.சிவாங்கன், கல்வி நிலைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.