உன்னிச்சை குளத்திற்கான களச்சுற்றுலா - 11.12.2011

December 13, 2011
தவசி லேணிங் சிற்றியானது மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகப்பெரிய குளமான உன்னிச்சை குளத்திற்கான களச்சுற்றுலா ஒன்றை கடந்த 11.12.2011 அன்று ஒழுங்கு செய்திருந்தது. இந்தக் களச்சுற்றுலாவில் கல்விநிலையத்தின் தலமை ஆசிரியர் அக்சயன், ஆலோசகர் சி.தில்லையன், சமூக இணைப்பாளர் மா.சாந்தீபன்  மற்றும் தரம் 09-13 வரையிலான ஆண்மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்தச் சுற்றுலாவின்


விசேட அம்சமாக கல்வி நிலையத்திலிருந்து சுமார் 35 கிலோமீற்றர் தூரம் கொண்ட உன்னிச்சைக் குளப்பகுதிக்கு துவிச்சக்கரவண்டிகளிலேயே பயணம் செய்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.