வருடாந்த பரிசளிப்பு விழா 2011

November 30, 2011
தவசி லேணிங் சிற்றியின் ஸ்தாபகர் அமரர் க.மாரிமுத்தன் அவர்களின் நான்காவது வருடாந்த நினைவுதினத்தை முன்னிட்டு தவசி லேணிங் சிற்றியின் வருடாந்த பரிசளிப்பு விழா இடம்பெற்றது. அத்துடன் வருடந்தோறும் வெளியிடப்படும் பசுமை எனும் சஞ்சிகையும் வெளியிடப்பட்டது.

 நிகழ்வினை தவசி லேணிங் சிற்றியின் தலைமை ஆசிரியர் அக்சயன் அவர்கள் தலைமையேற்று நடாத்தினார். இந்நிகழ்வில் திரு சு.சிவராசா (ஆசிரிய ஆலோசகர்), திரு. த.கமலநாதன் (ஆசிரியர்) , திருமதி வ.கமலநாதன் (ஆசிரியர்), திருமதி செ.தில்லையம்பலம் (சமூர்த்தி உத்தியோகஸ்தர்) ஆகியோர் விருந்தினாகளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கல்வி நிலையத்தின் சமூக இணைப்பாளர் மா.பரசுராமன் (சமூர்த்தி உத்தியோகஸ்தர்), திரு.செ.சந்திரகுமார் (தலைவர், பழைய மாணவர் சங்கம்) மற்றும் பழைய மாணவர்கள் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.