புவியிலே தொடர்ந்து நிகழ்ந்து வருகின்ற காலநிலையின்
குழப்பமான நிலைமைகள் காரணமாக தற்போது மின்னலின் தாக்கமும் அதிகரித்து
வருகின்றது. ஒரே தடவையில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தும் புவிநடுக்கம்,
வெள்ளப்பெருக்கு போல்லலாமல் , சிறு சிறு பாதிப்புக்களை அடிக்கடி
ஏற்படுத்துகின்ற ஓர் இயற்கை அனர்த்தமாக மின்னல் தாக்கம் (Lightning) காணப்படுகின்றது.
மின்னல் தாக்கமானது மழைக்காலங்களில்
பெருமளவில் ஏற்படுகின்ற ஒரு நிகழ்வாகும். இலங்கையைப் பொறுத்தவரை மார்ச்,
ஏப்ரல், ஒக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் மின்னல் தாக்கம்
இடம்பெறுகின்றது. அதுவும் குறிப்பாக மேற்காவுகை மழை , சூறாவளி மழை நிகழும்
காலப்பகுதிகளில் இவற்றின் தாக்கம் அதிகமாகக் காணப்படும்.
மின்னலின் உருவாக்கம்
மின்னல்
எனும் அனர்த்தமானது வளிமண்டலவியல் அனர்த்தத்திற்குள் அடங்குகின்ற ஒன்றாகக்
காணப்படுகின்றது. ஏற்றம் பெற்ற முகில்களிலிருந்து ஏற்றமற்ற நிலத்திற்கு
அல்லது ஏணைய முகில்களுக்கு பெரிளவிலான மின்னேற்றங்கள் பாயும்போது மின்னல்
தோற்றம்பெறுகின்றது. இவ்வாறு பெரிளவிலான மின்னேற்றமானது நிலத்தையோ அல்லது
முகிலையோ நோக்கி பாய்ந்துசெல்லல் மின்னிறக்கம் எனப்படுகின்றது.
மின்னேற்றமானது நிலத்தில் அல்லது முகிலினைச் சென்றடைகின்றபோது தோன்றுகின்ற ஒளியே மின்னல் எனவும் இவ்வாறு மின்னேற்றமானது இறக்கமடையும்போது அதற்கு அண்மையில் உள்ள வளியானது வெப்பமடைந்து விரிவடைவதினால் ஏற்படும் பெரிய சத்தம் இடி எனவும் அழைக்கப்படுகின்றது.
முகில்கள் மிக நுண்ணிய நீர்த்துளிகளினால் உருவானவையாகும். முகில்கள் பரம்பிக் காணப்படும் பகுதிக்கூடாக காற்றானது வேகமாக வீசும்போது நீர்த்துளிகள் ஒன்றுடன் ஒன்று உராய்வமைடவதனால் முகில்கள் மின்னேற்றமடைகின்றன.முகில்களின் மேற்பகுதிகள் பொதுவாக நேர்மின்னேற்றத்தையும், முகில்களின் கீழ்ப்பகுதிகள் பொதுவாக மறை மின்னேற்றத்தையும் கொண்டு காணப்படும். முகிலினுள் அதிகளவில் மின்னேற்றங்கள் சேருகின்றபோது அம்மின்னேற்றங்கள் இறக்கமடைய முற்படுகின்றன. அதிகரித்த மின்னேற்றங்கள் மின்னிறக்கமடையும்போது மின்னல் ஏற்படுகின்றது. மின்னல் செய்முறை அல்லது மின்னிறக்கச் செயன்முறையானது பின்வரும் மூன்று வகைகளில் காணப்படுகின்றது.
01. முகில்களுக்கிடையிலான மின்னிறக்கம் (முகில் - முகில் ) - முகில் தொகுதிகளுடன் தோடர்புபட்டு ஏற்படும் மின்னிறக்கம் முகில்களுக்கிடையிலான மின்னல் எப்படுகின்றது. குறிப்பாக ஏற்றங்கொண்ட முகில்களினுள்ளும், இரு ஏற்றம்கொண்ட முகில்களுக்கிடையேயும், ஏற்றம்கொண்ட மற்றும் ஏற்றமற்ற முகில்களுக்கிடையேயும் இந்த மின்னிறக்கம் ஏற்படுகின்றது.
02. முகில்களிலிருந்து புவிக்கு ஏற்படும் மின்னிறக்கம் (முகில் - புவி) – ஏற்றங்கொண்ட முகில்களிலிருந்து மின்னேற்றங்கள் புவிக்குப் பாய்வதால் ஏற்படும் மின்னிறக்கம் புவிமின்னல் ஏனப்படும்.
03. முகில்களிலிருந்து வளிக்கு ஏற்படும் மின்னிறக்கம் (முகில் - வளி) – மின்னேற்றம் அடைந்த முகில்களிலிருந்து மின்னேற்றங்கள் வளிக்கு பாய்வதனால் ஏற்படும் மின்னிறக்கம் வளிமின்னல் எனப்படுகின்றது.
மின்னிறக்கமடையும் பகுதியின் அடிப்படையில் இவ்வாறு முகில்மின்னல், புவிமின்னல், வளிமின்னல் என மூன்றாக அழைக்கப்படுகின்றன. இவற்றில் புவிமின்னல் வகையைச் சேர்ந்தவையே புவிமேற்பரப்பில் எமக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
மின்னலானது புவியை வந்தடையும் அல்லது தாக்கமடையும் முறைகள்
நான்கு காணப்படுகின்றன.
1. நேரடிமின்னல் தாக்கம் - உயரமான இடங்களில் அல்லது திறந்த வெளிகளில் இருக்கும் மனிதர்களையும் கட்டடங்களையும் நேரடியாக மின்னல் தாக்குவதனை நேரடி மின்னல் தாக்கம் என அழைக்கின்றனர்.
2. தொடுகை மின்னல் தாக்கம் - தொலைபேசி, மின்தொடுகைக்கம்பி, அண்டனா மற்றும் மரங்கள் போன்றவற்றினூடாக மனிதர்கள் அல்லது உயிரினங்கள் அல்லது கட்டடங்கள் தொடர்பு பட்டிருக்கின்றபோது தொடுகையிலுள்ள மனிதர்களையும் உடமைகளையும் மின்னல் தாக்குவதனை தொடுகை மின்னல் தாக்கம் என அழைக்கின்றனர்.
3. பக்கப்பாய்ச்சல் - உயர்ந்த மரங்களை தாக்குகின்ற மின்னலானது தொடுகையில் இல்லாததும், அருகில்; உள்ளதுமான மனிதர்களையும் கட்டடங்களையும் மின்னல் தாக்குவதனை பக்கப்பாய்ச்சல் மின்னல் தாக்கம் என அழைக்கின்றனர்.
4. படிமுறைப் பாய்ச்சல் - மரத்தை அல்லது கட்டங்களை தாக்கிய மின்னல் நிலத்தை அடைந்து மனிதரின் ஒரு காலினுடாக உடலுனுள் கடத்தப்பட்டு மறுகாலினூடாக வெளியேஞறுவதனால் ஏற்படும் மின்னல் தாக்கத்தினை படிமுறைப் பாய்ச்சல் மின்னல் தாக்கம் என அழைக்கின்றனர்.
மின்னலினால் ஏற்படும் பாதிப்புக்கள்
இடிமின்னல்
நிகழ்வுகளினால் உலகில் அதிகளிவில் உயிராபத்துக்கள் ஒவ்வொரு வருடமும்
ஏற்படுகின்றன. அமெரிக்காவில் உள்ள ஒரு புள்ளிவிபரவியல் தகவல்களின்படி
ஒவ்வொரு வருடமும் மின்னல் தாக்கி சுமார் நூறுபேர் மரணமடைகின்றனர் எனவும்,
பலநூறுபேர் ஊணமடைகின்றனர் எனவும் குறிப்பிடுகின்றது. இது அமெரிக்காவைப்
போறுத்தவரையில் சூறாவளி போன்றவற்றினால் ஏற்படும் தாக்கத்தை விட அதிகமாகும்.
இத்தகைய மின்னல் தாக்த்திற்கு இலங்கையிலும் மிகஅதிகளவில் உயிரிழப்புக்கள்
ஏற்படாமலில்லை. 2007 ஆம் ஆண்டில் பொலநறுவை பகுதியில்
மழைகாலத்தில் பயிற்சியெடுத்துக்கொண்டிருந்த சுமார் 40 இராணுவத்தினர்
பாதிக்கப்பட்டிருந்தனர்.
2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் 27 பேர் மின்னல் தாக்கி
உயிரிழந்துள்ளனர். அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே 20 பேர் உயிரிழந்துள்ளனர் என
இலங்கை வளிமண்டலவியல் தினைக்களம் அறிவித்துள்ளது.
2011 மார்ச் மாதத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்னல் தாக்கி 17 மாடுகள் உயரிழந்துள்ளன. மரத்தின் மீது மின்னல் தாக்கியபோது அதன் கீழ் மாடுகள் நின்றிருந்ததனாலேயே மாடுகள் உயிரிழந்தன.
இதேவேளை
கடந்த 2014 ஆம் ஆண்டில் நாட்டின் பல பாகங்களிலும் மின்னல் தாக்குதலின்
காரணமாக 47 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏப்ரல் மற்றும் ஒக்டோபர் மாதங்களில்
மின்னல் தாக்குதல் காரணமாக அதிகளவான
உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
தெரிவித்துள்ளது.
ஏப்ரல்
மாதத்தில் மட்டும் மின்னல் தாக்கம் காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளதுடன்
ஒக்டோபர் மாதத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வருடம் ஏப்ரல்
மாதத்திற்குள் 20 பேர் மின்னல் தாக்கம் காரணமாக
உயிரிழந்துள்ளதுடன், கடந்த வருட ஒக்டோபர் மாத்தில் 11 பேர்
உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
குறிப்பிட்டுள்ளது.
மின்னல் தாக்கத்தினால் மரங்கள் முற்றாகவோ அல்லது சிறிதளவொ பாதிக்கப்படுகின்றன. கடந்த 2011.12.13 அன்று மட்டக்களப்பு, சந்தணமடு ஆற்றுப் பிரதேசத்தில் மின்னல் தாக்கத்தினால் பனைமரம் ஒன்று சேதமடைந்திரப்பதனை பின்வரும் இரு படங்களிலும் கண்டுகொள்ளலாம்.
மின்னல்
தாக்கத்தினால் மின் உபகரணங்களும் சேதமடைகின்றன. கடந்த 2014 ஆம் ஆண்டு
செப்டம்பர் மாதத்தில் ஹட்டன் அம்பகமுவை பிரதேச சபைக்கு உட்பட்ட ருவன்புர
கிராமத்தில் மின்னல்
தாக்கத்தினால் சுமார் 10 வீடுகளிலுள்ள மின் உபகரணங்கள்
சேதமடைந்துள்ளன.
ஹட்டனில் மின் உபரணம் சேதம் |
ஹட்டனில் மின் உபரணம் சேதம் |
மின்னல்தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ளல்
மிகக்குறுகிய நேரத்தில் தாக்கும் மின்னல் தாக்க பாதிப்பிலிருந்து எம்மைப்
பாதுகாத்துக்கொள்வது அவசியமாகும். எனவே மின்னல் தாக்கம் பற்றிய
விழிப்புணர்வு எம்மத்தியில் அவசியமாகும். அந்தவகையில் அனர்த்தத்திற்கு
முன்னரான பாதுகாப்பு நடவடிக்கைகளையும், அனர்த்த வேளையின்போதான
நடவடிக்கைகளையும நாம் முறையாகக் கடைப்பிடிக்கின்றபோது இவற்றை தவிர்த்துக்
கொள்ளலாம்.
• இடிமின்னல் பொதுவாக ஏற்படுகின்ற காலப்பகுதியை அறிந்து வைத்திருத்தல் வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரையில் காலரீதியில் பார்க்கின்றபோது ஏப்பிரல், மே, ஒக்டோபர், நவம்பர் மாதங்களிலும் மற்றும் மேற்காவுகைமழை, சூறாவளி மழைக் காலப்பகுதிகளிலுமே ஏற்படுகின்றது. எனவே அத்தகைய காலங்களில் நாங்கள் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும்.
• வானிலை அவதானிப்பு நிலையங்களால் வெளியிடப்படும் வானிலை எதிர்வுகூறல்களை செவிமடுத்தல். சில வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்படும்போது இந்நாட்களில் நாம் பாதுகாப்பாக இருத்தல் வேண்டும்.
• இடிமின்னலானது ஏதாவதொரு பொருளுக்கூடாக புவியில் கடத்துகின்றது. சில வேளைகளில் உங்கள் வீடுகளுக்கு அருகில் மரங்கள் ஏதாவது இல்லையெனில் வீட்டை நேரடியாக தாக்கலாம். எனவே வீடுகளுக்கு அருகில் உயரமான மரங்களை வளர்க்கவேண்டும். இதன்மூலம் மின்னல் தாக்கமானது மரத்தினூடாகக் கடத்தப்பட்டு எமது வீட்டிற்குரிய பாதிப்பு தடுக்கப்படுகின்றது.
• உயர்ந்த கட்டங்களில் இடிதாங்கியை அமைத்தல் வேண்டும். இதன் மூலம் இடிதாங்கிகள் மின்னல் தாக்த்தை அயற்புறத்திற்கு விடாது தாம் தாங்கிப் புவிக்குக் கடத்துவலதுடன், அதனால் கட்டடங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களைத் தடுத்தும் விடுகின்றன.
• இடிமின்னல் வேளைகளில் திறந்த வெளிகளில் நிற்பதையோ அல்லது விளையாடுவதையோ அல்லது வயல்ளில் வேலைசெய்துகொண்டிருப்பதையோ தவிர்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் அந்தப் பரந்த வெளியில் உயர்ந்த பொருளாக நீங்களே இருக்கும்போது நேரடியாக மின்னல் தாக்கலாம்.
• சந்தர்ப்பவசத்தால் வெட்டவெளியில் இருக்கநேர்ந்தால் மின்னலின்போது தரையில் படுத்துவிடாதீர்கள். தரைக்கும் உடலுக்குமான தொடர்பினை இயலுமானளவில் குறைத்துக்கொள்ளக்கூடிய வகையில் குந்தி அமருங்கள் . இதனால் ஓரளவேனும் மின்னல் தாக்கத்தின் பாதிப்பை குறைக்கலாம்.
• இடிமின்னல் வேளைகளில் தொலைபேசிக் கோபுரங்கள், உலோகக் கொடிக்கம்பங்கள் , திறந்த ஒதுக்கிடங்கள் அருகாமையில் நிற்பதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். உயரமான மரங்களுக்கு கீழ் ஒதுங்குவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் மரங்களை நோக்கி இலகுவில் மின்னல் கடத்தப்படக்கூடியது ஆகும்.
• மூடப்படாத வாகனங்களில் இடிமின்னல் காலங்களின்போது செல்வதைத் தவிர்க்கவேண்டும். குறிப்பாக துவிச்கரவண்டி, மோட்டார் வண்டி போன்றவற்றிலோ அல்லது உழவு இயந்திரங்களிலோ செல்வதைத் தவிர்க்கவேண்டும்.
• வீட்டிலுள்ள மின்தொடர்புகள், அண்டனா தொடர்புகளைத் துண்டித்தல் வேண்டும். தொலைக்காட்சிகள், கணனிகள், மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் என்பவற்றை மின் இணைப்பிலிருந்து துண்டிக்கவேண்டும். இல்லையெனில் அவை உயர் மின்சார தாக்கத்தினால் பழுதடைந்துவிடும்.
• தொலைக்காட்சி மற்றும் நிலத்தொலைபேசிகளுக்குரிய அண்டனாக்களின் தொடர்பையும் துண்டித்தல் வேண்டும். மேலும் எந்தவிதமான ஆளிகளை அழுத்தும் செயற்பாடுகளையோ அல்லது மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதையோ தவிர்க்கவேண்டும்.
Article By :- Akshayan
(குறிப்பு:-
எமது களரீதியான ஆய்வுகளுக்கு எம்மோடு மட்டக்களப்பின் மியான்கல் குளம்,
குடும்பிமலை போன்ற பிரதேசங்களில் வழிகாட்டியாக செயற்பட்டு கடந்த 2012.04.26
அன்று மியான்கல் பகுதியில் மின்னல் தாக்கத்தில் உயிரிழந்த விவசாயி
மா.சுதாகரன் (படத்திலுள்ளவர்) என்பவரை இந்தநேரத்தில் நன்றியுடன் நினைவுகூர்ந்து இந்த ஆக்கத்தினை
சமர்ப்பிக்கின்றேன். )
பாடவிடயம் சந்தேகங்களை மின்னஞ்சல், முகப்புத்தகம், ஸ்கைப் ஆகியவற்றினூடாக கேட்டுத் தெளிவடைந்துகொள்ளலாம்.
Facebook:- https://www.facebook.com/akshayansm
Email:- akshayansm@gmail.com
Skype id :- akshayansm